Homeஇந்தியாயுபிஐ மூலம் கடன் வாங்க முடியுமா? இந்த அப்டேட்டை நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

யுபிஐ மூலம் கடன் வாங்க முடியுமா? இந்த அப்டேட்டை நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் ஒரு பெரிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த வசதியை அறிமுகப்படுத்திய பிறகு, உங்கள் UPI கணக்கு ஒரு கிரெடிட் கார்டு போல் செயல்படும். அதன் மூலம் வாடிக்கையாளர் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் UPI முறையில் எளிதாக பணம் செலுத்த முடியும்.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பணப் பரிவர்த்தனை விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளது. கிரெடிட் கார்டு போன்று செயல்படும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தப் போகிறது. இதற்காக UPI மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

UPI மூலம் கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் UPI ஒரு கிரெடிட் கார்டு போல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. கிரெடிட் லைனில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பு வரை இதன் மூலம் நாம் கடன் பெறலாம். செலவழித்த தொகைக்கு மட்டுமே வட்டி கட்ட வேண்டும். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த வேண்டும். கிரெடிட் லைனைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இருக்காது.

தற்போதுவரை ஷாப்பிங்கிற்கு மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடிகிறது. இதில் எந்த புதிய செயல்முறையையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பிஎன்பி ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறலாம்.

இந்த வசதி வந்த பிறகு மொபைல் ஆப் மூலமாக பணம் அனுப்புவோருக்குஅதிக நிவாரணம் கிடைக்கும் என்பதால் இதற்காக பயனாளிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் நிறையப் பேர் யூபிஐ முறைக்கு மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்