Homeஇந்தியாவாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி!

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி!

தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது வாரணாசி தொகுதிக்கு வருகை தந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக வாரணாசி தொகுதிக்கு வந்த பிரதமர் மோடி, “வாரணாசி மக்கள் என்னை மூன்றாவது முறையாக எம்.பி.யாக மட்டுமல்ல, பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். மூன்றாவது முறையாக நான் பிரதமராக வேண்டுமென நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. கங்கை அன்னை தற்போது தன்னை தத்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது . 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவோம். பெண்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் எனது 3-வது ஆட்சி இருக்கும்.

நான் இரவும் பகலும் இப்படி கடினமாக உழைப்பேன், உங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன். மக்கள் தம்மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கை, அவர்களுக்குச் சேவை செய்வதற்கும், நாட்டை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்கத் தூண்டுகிறது” என்றார்.

சற்று முன்