Homeதமிழ்நாடு1000 ரூபாய் உரிமை தொகை விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள மகளிர் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.

1000 ரூபாய் உரிமை தொகை விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள மகளிர் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள், மேல்முறையீடு செய்பவர்கள் அரசு இ சேவை மையங்களை நாடி அதன் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். இ சேவை மையங்களுக்கு செல்பவர்கள் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

முதலாவது கூட்ட நெரிசல். ஒரே நேரத்தில் பலர் கூடுவதால் டோக்கன் மூலம் குறிப்பிட்டவர்கள் மட்டுமே அன்றைய தினம் சேவையை பெற முடிகிறது. இரண்டாவது வேகம் குறைந்த இண்டர்நெட். மிக முக்கிய சேவையை பெற பொது மக்கள் வந்திருக்கும் போது இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஒரு நாள் வேலையைவிட்டு இ சேவை மையத்திற்கு வருபவர்கள் மறுநாளும் வர வேண்டிய நிலையை கூட்டநெரிசலும், இண்டர்நெட் வேகமும் ஏற்படுத்துகின்றன. இதை மாற்றியமைக்கும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு இ சேவை மையமும், கிராமங்களில் 3 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் ஒரு இ-சேவை மையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், மேல்முறையீடு, ஆதார் விண்ணப்பம், புதுப்பித்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இ சேவை மையங்களில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தகவல் தொழில் நுட்ப அமைச்சரிடம் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் tanfinet மூலமாக அனைத்து அரசு இ சேவை மையங்களுக்கும் ஃபைபர் கனெக்‌ஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே இனிவரும் காலங்களில் அரசு இ சேவை மையங்களில் கூட்ட நெரிசல், இண்டர்நெட் வேக பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கலாம்.

சற்று முன்