- Advertisement -
தமிழ்நாடு

சென்னை பெசன்ட் நகரில் நடந்த சாலை விபத்து! சாலையோரம் படுத்திருந்த இளைஞருக்கு நடந்த சோகம்.

சென்னை பெசன்ட் நகரில் சாலை ஓரம் மதுபோதையில் படுத்துறங்கிய இளைஞர் மீது கார் ஏறி விபத்துக்குள்ளானது.

சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. இதில் நடைமேடையில் படுத்திருந்த சூரியா என்ற இளைஞர் மீது கார் மோதியது. சூரியா பெயிண்டர் வேலைக்கு சென்றுவிட்டு வந்து சாலையோரம் அசந்து தூங்கியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்பது தெரிய வந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பீடா மாதுரியை கைது செய்து அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெண், உடன் வந்த ஒரு பெண் என இரு பெண்கள் தப்பி ஓடினர்.

- Advertisement -
Published by

Recent Posts