Homeதமிழ்நாடுசெங்கல்பட்டு சுங்க சாவடி அருகே நடந்த சோகம்.

செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே நடந்த சோகம்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்து உள்பட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிஅருகே திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்துக்கு முன்னாள் சென்ற கார் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதும் அரசு பேருந்து அந்த கார் வேகமாக மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் அந்த கார் முன்னாள் சென்ற கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

அரசு பேருந்து உள்பட அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதியதால் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். அதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வானங்களை எதிரும் பதிருமா ஓட்டி திருச்சி சென்னை மற்றும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 5கிலோமீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு வருகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சற்று முன்