காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று ஜெகன்நாதன் ரெட்டியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதற்காக சென்னையில் இருந்து சதாப்தி இரயில் மூலம் எடப்பாடி பழனிசாமி காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தார். சேகர் ரெட்டி வீட்டுக்குச் செல்லும் முன்னதாக ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னை அருகே ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும்.
கொலை வழக்கின் கைதி கையில் விலங்கு மாட்டப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டதா?
உண்மை குற்றவாளிகள் தொடர்பாக ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் கட்சியினர் சந்தேகிக்கும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.