திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு!
ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தோராயமாக ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சுமார் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சணனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக துறை உத்தரவு.
