Homeதமிழ்நாடுதமிழ்நாட்டில் நடந்த சோகம்! கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி.

தமிழ்நாட்டில் நடந்த சோகம்! கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி.

கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழப்பு.மேலும் 10க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த வேறு யாரும் இருந்தால் அவர்களே தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சற்று முன்