Homeதமிழ்நாடுகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 28 பேரும், சேலத்தில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சற்று முன்