Homeதமிழ்நாடுகாலாவதியான மெத்தனாலை கள்ளச்சாராயத்தில் கலந்தது உயிரிழப்புக்கு காரணம். விசாரணையில் தெரிய வந்த தகவல்

காலாவதியான மெத்தனாலை கள்ளச்சாராயத்தில் கலந்தது உயிரிழப்புக்கு காரணம். விசாரணையில் தெரிய வந்த தகவல்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் உள்ள செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை, மாதேஷ் என்பவர் வாங்கி வந்துள்ளார். காலாவதியான மெத்தனாலை, நல்ல சரக்கு எனக்கூறி சின்னதுரைக்கு விற்றுள்ளார்.

இவை ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வழியாக பல்வேறு சோதனைச் சாவடிகளை கடந்து விற்பனைக்கு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த காலாவதியான மெத்தனாலை சாராயத்தில் கலந்து சின்னதுரை விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று முன்