Homeதமிழ்நாடுமூத்த குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி! கட்டணமில்லா பயணம் வரும் 21ஆம் தேதி முதல் துவக்கம்.

மூத்த குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி! கட்டணமில்லா பயணம் வரும் 21ஆம் தேதி முதல் துவக்கம்.

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு மாநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு மாநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள வருகிற 21 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. 42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று, 2 வண்ண புகைப்படங்களை அளித்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூலை 2024- டிசம்பர் 2024 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சற்று முன்