Homeதமிழ்நாடுமதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு நடந்த சோகம்.

மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு நடந்த சோகம்.

பேருந்து நிறுவன அலுவலர்கள் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவரை கயிற்றால் ஜன்னலில் கட்டி வைத்து விசாரணை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாகவும், அந்த பயணிகளை ஏற்றியதற்கான பணத்தை தனது போன் மூலமாக பெற்றுக் கொண்டு, பேருந்து உரிமையாளரிடம் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்ற விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுரையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.

சற்று முன்