Homeதமிழ்நாடுபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளையும் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணை படியே இயங்கும்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளையும் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணை படியே இயங்கும்.

பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை (17/06/2024) சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8-11 மணி வரையிலும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணி; பகல் 11 முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சற்று முன்