Homeதமிழ்நாடுநீலகிரியிலும் நிலச்சரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்

நீலகிரியிலும் நிலச்சரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 2 வரை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தின் ஓர சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதாலும், நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகமாக காற்று வீசுவதன் காரணமாக பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் விளக்கியுள்ளார்.

மேலும், “உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும்.

ஊட்டி முதல் கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாலும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை மற்றும் கூடலூர் வரும் கனரக சரக்கு வாகனங்கள் (அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் தவிர) இன்று முதல் ஒரு வாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றும் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரி ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

சற்று முன்