Homeதமிழ்நாடுசுப்ரமணிய சுவாமி மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி பேசியது.

சுப்ரமணிய சுவாமி மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி பேசியது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் கட்சியின் தலைமை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், யூடியூப் விவாதங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்.

இந்நிலையில் தான் சென்னை விமான நிலையம் வந்த சுப்பிரமணியன் சுவாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். ‛‛நாட்டில் இப்போது வேலையில்லாத திண்டாட்டம் நிறைய உள்ளது. சீனா நம் நாட்டுக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுகிறார்கள். அதுபற்றி யாருமே பேசுறது இல்லை. இது தலைமையின் தோல்வி. நாடாளுமன்றத்தில் அவர் இப்படி பேசினார். இவர் இப்படி பேசினார் என கூறுவதை தடுக்க கட்சியின் தலைவர்கள் தான் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாடு இல்லை. அதுதான் பிரச்சனை’’ என்றார்.

இதையடுத்து ‛‛ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‛‛அதெல்லாம் இப்போதைக்கு வராது. கவலைப்படாதீர்கள்’’ என்று பதிலளித்தார். இந்த வேளையில் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வந்தது குறித்து பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ‛‛ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். முட்டாள்தனமாக கொண்டு வந்து இருக்காங்க. நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது. அதிகாரிகள் எல்லாவற்றையும் முடித்து எழுதி கொடுப்பார்கள். அதை தான் பேசுவார்’’ என்று கூறினார்.

சற்று முன்