Homeதமிழ்நாடுகாஞ்சிபுரத்தில் பரபரப்பு! பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு. நடந்தது?

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு. நடந்தது?

பெரியகாஞ்சிபுரம் சாலையில் சீருடையில் இருந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய காவலர் டில்லி ராணி, பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டில்லிராணியை வழிமறித்த மர்மநபர், அவரது வலது கையில் வெட்டிவிட்டு தப்பியோடினார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவன் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. குடும்ப பிரச்சினையில் கணவரே காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன், “காஞ்சிபுரத்தில் பெண் காவலர் டில்லி ராணிக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு! காரணம் எதுவாயினும், சீருடையிலுள்ள காவலருக்கே பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்ட-ஒழுங்கு சீர்கேட்டில் தினம் ஒரு புதிய உச்சத்தைத் தொடும் விடியா திமுக மாடல் அரசு” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

சற்று முன்