தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரிகளுக்கு போதுமான மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள், கல்லூரிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். இதனை பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.