Homeதமிழ்நாடுதமிழ்நாட்டின் புயல் நிவாரணத்திற்கு 944 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

தமிழ்நாட்டின் புயல் நிவாரணத்திற்கு 944 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.

ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை 28 மாநிலங்களுக்கு 21,718 கோடி விடுவித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் அதிகம் நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

சற்று முன்