Homeதமிழ்நாடுஆவடியில் தன்னுடைய பைக்குக்கு தானே தீ வைத்த இளைஞன்!

ஆவடியில் தன்னுடைய பைக்குக்கு தானே தீ வைத்த இளைஞன்!

மதுபோதையில் தனது பைக்குக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி பருத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாசிலா, 65 ; ஆட்டோ டிரைவர். அவரது மகன் முகேஷ், 33 ; வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இன்று மதியம், மது போதையில் இருசக்கர வாகனத்துக்கு மாத தவணை கட்டுவதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் தராததால், மனம் உடைந்த முகேஷ் தனது ‘ஹீரோ ஸ்ப்ளெண்டர்’ பைக்கை பருத்திபட்டு அருகே சாலையில் நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். ஆவடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பைக் தீக்கிரையானது.

விசாரணையில், பைக்கை எரித்தது முகேஷ் என தெரிந்தது. ஆவடி போலீசார் முகேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சற்று முன்