Homeதமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில், 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14- ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 3 மணி வரை திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242-வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51-வது முறையாகவும், நூர் முகமது 44-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வருகின்ற 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாகும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி தேர்தலும், 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

சற்று முன்