Homeதமிழ்நாடுசாதனை படைத்த பாக்சிங் வீரர்களுக்கு தினகரன் வாழ்த்து!

சாதனை படைத்த பாக்சிங் வீரர்களுக்கு தினகரன் வாழ்த்து!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் உட்பட 27 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் 31 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என, பங்கேற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்று பதக்கப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதே உத்வேகத்துடன், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றிவாகை சூடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க தமிழகத்தைச் சேர்ந்த கிக் பாக்சிங் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .

சற்று முன்