Homeதொழில்நுட்பம்ஜூலை மாதம் புது அறிமுகம்! ஒன் பிளஸ் நார்டு 3!ஸ்மார்ட் போன்.

ஜூலை மாதம் புது அறிமுகம்! ஒன் பிளஸ் நார்டு 3!ஸ்மார்ட் போன்.

ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ், சீனாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் போன்களுக்கு அடுத்தபடியாக ரிச் மொபைலாக ஒன்பிளஸ் கருதப்படுகிறது. ஒன் பிளஸ் செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ளன. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதனையொட்டி அதன் டீசரி ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770×1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 16 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வரை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளும் வழாங்கப்படலாம் என கூறப்படுகிறது.

சற்று முன்