Homeதொழில்நுட்பம்வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த வந்தாச்சு வசதி!

வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த வந்தாச்சு வசதி!

வாட்ஸ் ஆப் செயலியில் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.30 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் செயலியில் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி இரண்டு கணக்குகளை நம்மால் உபயோகிக்க முடியும். இந்த வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க் கூறியுள்ளார்.

சற்று முன்