- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் ஆடணும்னு ஆசை இருந்தா இதை பண்ணுங்க.. பிசிசிஐயின் கிடுக்கிப்பிடி.. ஆடிப் போன இஷான் கிஷன்..

ஐபிஎல் ஆடணும்னு ஆசை இருந்தா இதை பண்ணுங்க.. பிசிசிஐயின் கிடுக்கிப்பிடி.. ஆடிப் போன இஷான் கிஷன்..

- Advertisement 1-

ஒரு பக்கம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் டெஸ்ட் தொடர், இன்னொரு பக்கம் ரஞ்சித் தொடர்கள் என இந்தியாவில் பல கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் சில சர்ச்சையான விஷயங்களும் கிரிக் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக தான் மாறி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக மனசோர்வு காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார் இஷான் கிஷன்.

இதன் பின்னர் பல கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி ஆடிய போதிலும் எதிலும் அவர் ஆட விருப்பம் காட்டவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றது. இஷான் கிஷன் தொடர்ந்து விடுப்பில் இருப்பதுடன் மட்டுமில்லாமல் இது பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அவர் எப்போது இந்தியாவிற்கு திரும்புகிறாரோ அப்போது நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று சாதாரணமாக பதில் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் இஷான் கிஷன் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தால் நிச்சயம் அது பெரிய இழப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது. அப்படி இருந்த போதிலும் இஷான் கிஷன் இதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காமல் கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருவது இன்னும் ரசிகர்களையும், பிசிசிஐ நிர்வாகத்தினரையும் கொந்தளிக்க செய்வதாக உள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான் தற்போது மிக முக்கியமான ஒரு புதிய விதியை பிசிசிஐ கொண்டு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாகவே ரஞ்சித் தொடரில் பல முன்னணி வீரர்கள் ஆட ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தெரிகிறது. சில வீரர்கள் கூட, சொந்த மாநிலத்திற்காக ஆடும் ரஞ்சித் தொடர் மீது யாரும் ஆர்வம் காட்டாததால் அதை நிறுத்தி விடுங்கள் என வேதனையுடன் கூட கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

- Advertisement 2-

அப்படி ஒரு நிலையில் தான் தற்போது பிசிசிஐ புதிய கட்டுப்பாடு ஒன்றை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மூன்று முதல் நான்கு ரஞ்சிப் போட்டிகளில் ஆடும் வீரர்கள் தான் ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஐபிஎல் தொடரில் அவர்கள் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். சர்வதேச வீரர்கள் இல்லாமல் க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த விதி செல்லும் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து பயிற்சிகளில் மட்டும் ஈடுபட்டு ஒரு இஷான் கிஷன் போன்ற வீரர்கள், பணம் செழிக்கும் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் ஆடி விட்டு ரஞ்சித் தொடரில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால், அவர்களை வழிக்கு கொண்டு வர இந்த கிடுக்கு பிடியை பிசிசிஐ போட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சற்று முன்