- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனி அவரு இந்தியாக்காக ஆடுறதே டவுட்டு தான்.. இஷான் கிஷன் மீது கோபத்தில் இருக்கும் இந்திய...

இனி அவரு இந்தியாக்காக ஆடுறதே டவுட்டு தான்.. இஷான் கிஷன் மீது கோபத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி..

- Advertisement 1-

இந்திய அணியில் சமீபத்திய பல தொடர்களில் தொடர்ந்து இளம் வீரர்கள் அதிகம் ஆடி வருகின்றனர். ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பைத் தொடர்களில் ஜொலிக்கும் பல வீரர்களுக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறனையும் சர்வதேச அணிக்காக நிரூபித்து கிரிக்கெட் அரங்கிலும் கவனம் பெற்று வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டில் ஆரோக்கியமான விஷயமாக நிறைய இளம் வீரர்கள் ஆடுவது பார்க்கப்பட்டு வந்தாலும் இதில் ஒரு சிக்கலும் கூடவே உள்ளது. ஏறக்குறைய 20 முதல் 30 வீரர்கள் வரை சுழற்சி முறையில் இந்திய அணிக்காக ஆடுவதால், உலக கோப்பை தொடர்கள் வரும் போது அதிலிருந்து சிறந்த வீரர்களை இந்திய அணிக்காக தேர்வு செய்வதில் பெரிய குழப்பமே உருவாகும்.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் வைத்து நடக்கப் போகும் டி 20 உலக கோப்பைக்கான குழப்பமும் தற்போதில் இருந்தே எழுந்து விட்டது. இதற்கிடையே, பிரபல இளம் வீரர் ஒருவர் இனி இந்திய அணியில் ஆடுவதே கேள்விக்குறியாகி உள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியதன் மூலம் சர்வதேச இந்திய அணியிலும் இடம்பிடித்தவர் தான் இஷான் கிஷன். முதல் பந்து முதலே அதிரடியாக ஆடி ரன் சேர்க்கும் இவர், அதிவேகமாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அப்படி ஒரு சூழலில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் இந்திய அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவருக்கு ஆடும் லெவனில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, தெனாப்பிரிக்க அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த தொடருக்கு முன்பாக தனக்கு ஓய்வு வேண்டுமென கேட்டுக் கொண்டு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் இஷான் கிஷன்.

- Advertisement 2-

ஆனால், இதன் பின்னர் பல தொடர்கள் நடந்த போதிலும் அவர் இந்திய அணிக்காக எந்த தொடரிலும் தேர்வாகவில்லை. இது பற்றி பேசி இருந்த ராகுல் டிராவிட், இஷான் கிஷன் அணிக்கு திரும்புவது பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, ரஞ்சி கோப்பையில் அவர் ஆடுவார் என பார்த்தால், இதுவரை அதற்கான முயற்சிகளிலும் இஷான் கிஷன் இறங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், இஷான் கிஷன் மீது பிசிசிஐயும் கடும் கோபத்தில் இருப்பதாகாக தகவல்கள் கூறுகின்றது. ஏற்கனவே டி 20 உலக கோப்பைத் தொடருக்கு இந்திய அணியில் தேர்வாக போகும் வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அப்படி இருக்கையில், இஷான் கிஷன் எந்தவித பதிலும் சொல்லாமல் இருப்பதால் அவரை உலக கோப்பை அணியில் தேர்வு செய்யும் எண்ணத்தில் பிசிசிஐ இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளிவந்துள்ளது.

இஷான் கிஷன் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இருந்து வரும் சூழலில் இதற்கான முடிவு எப்போது எட்டும் என்பதும் தெரியவில்லை.

சற்று முன்