- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெய்ஸ்வாலுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. டெஸ்ட் தொடரில் நடந்த விசித்திர சம்பவம்..

ஜெய்ஸ்வாலுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. டெஸ்ட் தொடரில் நடந்த விசித்திர சம்பவம்..

- Advertisement 1-

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கண்டுபிடித்த சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக மாறி உள்ளார் ஜெய்ஸ்வால். அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்பதை ஐந்தே டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்து விட்ட ஜெய்ஸ்வால், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் பெரிய பங்கு வகிப்பார் என தெரிகிறது. முன்னதாக புஜாரா, ரஹானே உள்ளிட்ட சீனியர் வீரர்களை இந்திய அணி எடுக்காமல் போன நிலையில், கே. எல். ராகுல், கோலி, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களும் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகி இருந்தனர்.

அப்படி ஒரு சூழலில் தான் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப், துருவ் ஜூரேல், தேவ்தத் படிக்கல் என பல இளம் வீரர்களுக்கு அறிமுகமாகும் வாய்ப்பும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கிடைத்திருந்தது.

அதனை கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் மிகக் கச்சிதமாகவும் இந்திய அணியின் இளம் வீரர்கள் நேர்த்தியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தனர். இத்தனை இளம் வீரர்கள் அணியில் இருந்த போதும் எந்தவித நெருக்கடிக்கும் உள்ளாகாமல் அவர்களை சிறப்பாக வழி நடத்தி இருந்தார் கேப்டன் ரோகித் சர்மா. டெஸ்டில் இளைஞர்களை தேர்வு செய்தது பெரிய விமர்சனமாக பார்க்கப்பட்ட நிலையில் இந்த வெற்றியின் மூலம் அவர்கள் அனைவரின் வாயையும் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அடைத்துள்ளனர்.

இதனால் இனி வரும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் இளம் வீரர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு இந்த தொடரில் நடந்த விசித்திர சம்பவம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பை இந்த தொடரில் ஜெய்ஸ்வால் பெற்றிருந்தார்.

- Advertisement 2-

முன்னதாக இந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்களை அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் அடித்த போதிலும், அந்த இரண்டு போட்டியில் சில காரணங்களால் வேறு வீரர்களுக்கு தான் ஆட்டநாயகன் விருது கிடைத்திருந்தது. சாதனை நாயகன் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்காமல் போனது அந்த சமயத்தில் பேசு பொருளாக இருந்தது.

அப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் அவர் தொடர் நாயகனாக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் தான் பொதுவாக இரட்டை சதம் அடித்து ஒருவர் ஆட்ட நாயகன் விருது பெறும் வாய்ப்பை போட்டிகளில் இழந்தும் தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் நிச்சயமாக ஜெய்ஸ்வாலாக மட்டும் தான் இருப்பார் என்றும் தெரிகிறது. இதனால், ஜெய்ஸ்வாலுக்கு நடந்த விசித்திர சம்பவத்தை ரசிகர்களும் வியப்புடன் பார்த்துவருகின்றனர்.

சற்று முன்