- Advertisement 3-
Homeவிளையாட்டு48 மணி நேரம் இனி அவரால பேச முடியாது.. இந்திய வீரருக்கு நடந்த துயரம்.. அப்படி...

48 மணி நேரம் இனி அவரால பேச முடியாது.. இந்திய வீரருக்கு நடந்த துயரம்.. அப்படி என்ன தான் ஆச்சு..

- Advertisement 1-

இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கியமான தொடக்க வீரராக உருவெடுத்திருந்தவர் தான் மயங்க் அகர்வால். இவர் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருந்த சூழலில், பின்னர் சில தொடர்களில் சோபிக்காததன் காரணமாக தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டிருந்தார்.

இதற்கடுத்து, ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் மயங்க் அகர்வால், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக ஆடவும் உள்ளார். நல்ல ஒரு தொடக்க வீரராக இந்திய அணியில் மயங்க் அகர்வால் வலம் வந்த போதிலும், அடுத்தடுத்து அவரது இடத்தில் நிறைய இளம் வீரர்கள் வர, அவருக்கான வாய்ப்பும் மங்கிப் போனது.

இதனால், உள்ளூர் தொடர்களில் ஆடி தான் இழந்த இடத்தை மீண்டும் இந்திய அணியில் பிடிக்கும் முயற்சியிலும் மயங்க் அகர்வால் இறங்கி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில், கர்நாடகா அணியின் கேப்டனாக இருக்கும் மயங்க் அகர்வால், சமீபத்தில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டிக்காக ஆடுவதாக விமானத்தில் அணியினருடன் சென்றுள்ளார்.

அப்போது மயங்க் அகர்வால் குடித்த தண்ணீர் காரணமாக, அவரது உடல்நிலை மோசமாக தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றது. முன்னதாக அவரது தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் எரிச்சல் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவர் குடித்த தண்ணீரில் ஆசிட் போன்ற திரவம் கலந்திருந்ததால் தான் அப்படி ஒரு நிலை உருவானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

- Advertisement 2-

இதனால் அதிக பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் மயங்க் அகர்வால். மேலும் இந்த திரவம் காரணமாக உருவான புண்கள் பெயரில், சுமார் 48 மணி நேரம் மயங்க அகர்வாலால் பேச முடியாது என்றும் அதன் பின்னர் தான் அவரால் பேச முடியும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில், மயங்க் அகர்வால் தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. தீவிர விசாரணைக்கு பின்னர், இப்படி நடந்ததற்கான காரணம் தெரிய வரும் என்ற சூழலில், பிரபல வீரருக்கு இப்படி ஒரு கதி விமானத்தில் ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்தி, தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சை உருவாகவும் வழி வகுத்துள்ளது.

மேலும் தனது உடல்நிலை காரணமாக இன்னும் ஒரு சில போட்டிகளை ரஞ்சி தொடர்களில் மாயங்க் அகர்வால் ஆடுவதிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்