- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் ரிட்டையர்மென்ட் எப்போது? தனக்கு தெரிந்ததை முழுமையாக கூறிய சின்ன தல ரெய்னா

தோனியின் ரிட்டையர்மென்ட் எப்போது? தனக்கு தெரிந்ததை முழுமையாக கூறிய சின்ன தல ரெய்னா

-Advertisement-

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது பதினைந்து சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் 16-வது சீசனில் பிரமாதமாக வீறு நடைபோட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்த 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது மே மாதம் முதல் வாரத்தில் 50 லீக் போட்டிகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட இந்த தொடரானது இறுதி கட்டத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ள வேளையில் இந்த தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. அந்த அளவிற்க்கு ஒவ்வொரு அணியும் கடுமையான போராட்டத்தை அளித்து வருகின்றன. அதோடு புள்ளி பட்டியலில் ஒவ்வொரு அணியும் முன்னிலை பெற கடுமையாக போராடி வருகின்றனர்.

இவ்வேளையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 புள்ளிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுதான் தோனிக்கு கடைசி சீசன் என்று பல்வேறு கருத்துக்கள் உலா வரும் வேளையில் தோனி இதுவரை எந்த ஒரு முடிவையும் வெளியிடாமல் உள்ளார். அதோடு தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசன்னாக இருக்கலாம் என்பதனால் சென்னை மட்டுமின்றி இந்தியாவில் சிஎஸ்கே அணி எங்கு விளையாடினாலும் மைதானத்தில் ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சியுடன் அவரை ஆரவாரமாக வரவேற்று வருகின்றனர்.

இருப்பினும் தோனியோ இந்த ஆண்டு தான் ஓய்வு பெற வாய்ப்பு இல்லை என்பது போன்ற சில கருத்துக்களை மறைமுக பதிலாக அளித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா தோனியின் ஐ.பி.எல் ஓய்வு அறிப்பு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

-Advertisement-

சென்னை அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு வருடம் விளையாட திட்டமிட்டுள்ளேன் என்று தோனியே தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த பேட்டி வெளியானதில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் தோனி மீண்டும் ஒரு ஆண்டு விளையாட இருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்