- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் - ஜடேஜா இடையே உருவான சண்டை?.. மாறி மாறி பழி சுமத்தும் இந்திய வீரர்கள்..

அஸ்வின் – ஜடேஜா இடையே உருவான சண்டை?.. மாறி மாறி பழி சுமத்தும் இந்திய வீரர்கள்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிக பலத்துடன் திகழ்ந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் அனைத்து பந்து வீச்சளர்களுமே சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆட தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 76 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் அதிகம் சேர்த்த ஜெய்ஸ்வால், 80 ரன்களில் அவுட்டானார்.

இதற்கடுத்து, கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் என அனைவருமே தங்களது பங்களிப்பை அளிக்க இந்திய அணி இரண்டாம் நாளில் ஆல் அவுட்டாகாமல் தொடர்ந்து ஆடி வருகிறது. ஷ்ரேயஸ் ஐயர் 35 ரன்களில் அவுட்டாக, கே எல் ராகுலும் சதத்தை தவறவிட்டு 86 ரன்களில் அவுட்டானார். பரத் 41 ரன்கள் எடுத்து அவுட்டாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆடி வருகின்றனர்.

இரண்டாம் நாளின் முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் சதத்தை தவற விட்ட நிலையில், நாளைய ஆட்டத்தில் ஜடேஜா நிச்சயம் சதமடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

இதனிடையே, அஸ்வின் ரன் அவுட்டான போது நடந்த சம்பவம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1 ரன்னில் ரன் அவுட்டான அஸ்வின், முன்னதாக தான் சந்தித்த பந்தை அருகே அடித்து விட்டு சிங்கிள் ஓட முயன்றார். ஆனால், மறுபுறம் நின்ற ஜடேஜா, கிரீஸை விட்டு வந்து விட்டு பின்னர் மீண்டும் உள்ளே செல்ல, வேகமாக ஓடி வந்த அஸ்வின் ரன் அவுட்டானார்.

தான் அவுட்டானதும் அதிருப்தி அடைந்த அஸ்வின், ஜடேஜாவிடம் கோபப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி அப்போது வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி, “அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் டிரெஸ்ஸிங் ரூமில் இரு மூலைகளில் இருப்பார்கள். இருவரும் தங்களின் தவறை உணறாமல், மாறி மாறி தான் பழி சுமத்திக் கொண்டு இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்