- Advertisement 3-
Homeவிளையாட்டுஜடேஜாவால் இந்திய அணிக்கு வந்த பெரிய தலைவலி.. அடுத்த மேட்ச்ல அப்போ கதை முடிஞ்சுதா..

ஜடேஜாவால் இந்திய அணிக்கு வந்த பெரிய தலைவலி.. அடுத்த மேட்ச்ல அப்போ கதை முடிஞ்சுதா..

- Advertisement 1-

உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி பல கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே அவர்கள் தோல்வி அடைந்தது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் தோல்வி அடையும் போது பல கடுமையான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையும் உருவாகும்.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியில் புஜாரா, சர்பராஸ் கான் என ரஞ்சி தொடரில் ஜொலித்த வீரர்களுக்கு இடம் கொடுக்காமல், டெஸ்ட் தொடரில் அதிகம் ஜொலிக்காமல் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அதிக கண்டனங்களை உருவாக்கி இருந்தது.

ரசிகர்களின் விமர்சனத்தை உண்மையாக்கும் விதமாக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் கடந்த பல டெஸ்ட் போட்டிகளாக 50 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அடுத்த டெஸ்டிலாவது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இன்னொரு பக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தொடர்ந்து இந்திய அணிக்காக மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியிலும் கூட, முதல் இன்னிங்சில் 87 ரன்கள் எடுத்த ஜடேஜா, மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் துரதிர்ஷ்டவசமாக அவர் 2 ரன்னில் ரன் அவுட்டானார். ஒரு வேளை அவர் அவுட்டாகாமல் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் இந்திய அணி போட்டியை வென்றிருக்கவும் ஒரு வேளை வழி செய்திருக்கலாம்.

- Advertisement 2-

மீதமுள்ள 4 டெஸ்டிலும், இதே போல தனது ஆல் ரவுண்டர் திறனை நிரூபித்து இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இதற்கிடையே, அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜடேஜா ரன் அவுட்டான சமயத்தில், அவர் நடந்து வெளியே போன போது தட்டுத் தடுமாறி நடந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றிய தகவலின் படி, அவரது தொடை பகுதியில் காயம் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், இனி வரும் போட்டிகளில் அவர் களமிறங்குவதில் சந்தேகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா, அடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் போனால் அது நிச்சயம் பின்னடைவு தான் என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்