- Advertisement 3-
Homeவிளையாட்டுரெய்னாவின் சூப்பர் ரெக்கார்ட் காலி.. மேட்ச் தோத்தாலும் சிஎஸ்கேவுக்கு எதிரா ரோஹித் செஞ்ச தனித்துவமான சாதனை..

ரெய்னாவின் சூப்பர் ரெக்கார்ட் காலி.. மேட்ச் தோத்தாலும் சிஎஸ்கேவுக்கு எதிரா ரோஹித் செஞ்ச தனித்துவமான சாதனை..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் மும்பை அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் ரோகித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொடரில் தொடர்ந்து மும்பை அணிக்காக சிறந்த பங்களிப்பை தொடக்க வீரராக செய்து வரும் ரோஹித் ஷர்மா, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 105 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார்.

207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ஆரம்ப ஓவர்கள் அவர்கள் சிறப்பாக ஆடியிருந்தாலும், பதிரானா சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் குறைந்து போனது. ஆனாலும், ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதமடித்ததுடன் கடைசி வரை களத்தில் நின்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் இரண்டாவது சதமாகவும் இது பதிவாகியுள்ள நிலையில் தோல்வி அடைந்திருந்தாலும், அவர் சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் இளம் வீரர்கள் துடிப்பாக செயல்படும் நிலையில் ரோஹித், கோலி உள்ளிட்டோர் அதிரடியாக ஆடமாட்டார்கள் என்ற விமர்சனம் இருந்து வந்தது.

இந்த நிலையில் அவற்றையெல்லாம் சுக்கு நூறாக்கி இருவருமே இந்த ஐபிஎல் தொடரில் சதம் அடித்து அசத்தி உள்ளனர். அதிலும் ரோஹித் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு தொடக்க வீரராக பெரிய அளவில் பலன் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு சூழலில், ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒரு சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

- Advertisement 2-

ஐபிஎல் என வந்து விட்டாலே அதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி, ஏதோ இரு நாடுகள் மோதுவது போன்ற ஒரு உணர்வை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கும். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை இரு அணிகளும் வென்றுள்ளதால் தான் இந்த ஒரு பரபரப்பு ரசிகர்களுக்கும் இருந்து வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளும் இடையே நடைபெறும் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்று பெருமையை தற்போது ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரராக சென்னையின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இருந்து வந்தார். அதனை தற்போது தனது சதத்தின் உதவியுடன் நொறுக்கி உள்ள ரோகித் சர்மா சிஎஸ்கே Vs மும்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்