- Advertisement -
Homeகிரிக்கெட்தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து ஆரஞ்ச் கேப்பை வாங்கியதும் கோலி செஞ்ச விஷயம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்..

தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து ஆரஞ்ச் கேப்பை வாங்கியதும் கோலி செஞ்ச விஷயம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்..

-Advertisement-

இந்த சீசனில் ஆர்சிபி அணியில் மிகச் சிறந்த வீரர்களாக இருந்து வருபவர்கள் தான் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர். அப்படி இருக்கையில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் ஆரஞ்சு கேப்பை பெற்றுக் கொண்டதும் விராட் கோலி, தினேஷ் கார்த்திக்கிடம் செய்த விஷயம் ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான, அதிரடியான ஒரு சீசன் என்றே சொல்லலாம். 10 வீரர்கள் வரை இதுவரை 350 ரன்களுக்கு மேல் குவித்துள்ள நிலையில், 5 வீரர்கள் 400 ரன்களையும் கடந்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆரஞ்சு கேப் மாறிக்கொண்டே இருக்க பல இளம் வீரர்கள் கூட இந்த இந்த சீசனில் அமர்க்களமாக செயல்பட்டு ரன்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் 62 ரன்கள் அடித்திருந்த ருத்துராஜ், 500 ரன்கள் கடந்து விராட் கோலியிடமிருந்து ஆரஞ்சு கேப்பையும் வென்றிருந்தார். 10 போடிகளில் 509 ரன்களை ருத்துராஜ் அடித்திருந்த நிலையில் தற்போது குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதனை கடந்து மீண்டும் ஆரஞ்சு கேப்பை தன்வசமாக்கி உள்ளார் விராட் கோலி.

இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடிய போது தொடக்கத்தில் அதிரடி காட்டிய விராட் கோலி, 27 பந்துகளில் இரண்டு ஃபோர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனால் ருத்துராஜ் ரன்னையும் முந்தி தற்போது 11 போட்டிகள் ஆடி 542 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, போட்டி முடிவடைந்ததும் அந்த அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்கிடமிருந்து ஆரஞ்ச் கேப்பை பெற்றிருந்தார்.

-Advertisement-

அப்படி தினேஷ் கார்த்திக் கையில் இருந்து ஐபிஎல் ஆரஞ்சு கேப்பை பெற்றதும் விராட் கோலி செய்த செயல் தான் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. போட்டி முடிந்த பின்னர் தினேஷ் கார்த்திக் கையில் இருந்து விராட் கோலியிடம் ஆரஞ்சு கேப்பை பெற்றுக் கொண்டார்.

மறுகணமே சீனியர் வீரர் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை நோக்கி தலை வணங்கினார் விராட் கோலி. நம்பர் ஒன் வீரராக கிரிக்கெட் அரங்கில் வலம் வந்த போதிலும் எந்தவித தலைக்கனமும் இன்றி விராட் கோலி செய்த இந்த சம்பவம், தற்போது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

-Advertisement-

சற்று முன்