- Advertisement -
Homeசினிமாவிபத்தில் சிக்கிய சீயான் விக்ரம்… தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தமா?...

விபத்தில் சிக்கிய சீயான் விக்ரம்… தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தமா?…

-Advertisement-

சீயான் விக்ரம் சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். ஒரு பட்டத்து இளவரசனாக மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார் விக்ரம்.

விக்ரமின் நடிப்பை குறித்தும் அவர் செய்யும் மெனக்கெடல்கள் குறித்தும் நாம் தனியாக கூறத்தேவையில்லை. சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு எந்த கெட்டப் அணிந்து நடித்தாலும் மிக கச்சிதமாக பொருந்தக்கூடியவர் விக்ரம்.

“அந்நியன்”, “கந்தசாமி”, “ஐ” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். எனினும் சமீப காலமாக விக்ரம் நடிக்கும் சில திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில்தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். விக்ரமிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பா.ரஞ்சித்துடன் இணைந்தார். ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஆதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்கும் பாணியே பா.ரஞ்சித்தின் பாணி. குறிப்பாக அவரது திரைப்படங்கள் அனைத்தும் பல்வேறு தரப்பினரால் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

-Advertisement-

இந்த நிலையில் பா.ரஞ்சித் விக்ரமுடன் இணைவதாக வெளிவந்த செய்தி பலரின் எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கே.ஜி.எஃப் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு “தங்கலான்” என பெயர் வைக்கப்பட்டது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற விக்ரமின் அட்டகாசமான கெட்டப் ரசிகர்கள் பலரையும் அசரவைத்தது. அதே போல் சமீபத்தில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது.

அதாவது “தங்கலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சீயான் விக்ரமிற்கு எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு அவரது விலா எழும்பு முறிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆதலால் சில நாட்கள் “தங்கலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Advertisement-

சற்று முன்