சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோதே இவருக்கு ரசிகர்கள் பலர் உண்டு. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு தனது வசீகரமான நடிப்பால் ஃபேமிலி ஆடியன்ஸை கைக்குள் போட்டுக்கொண்டார்.
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வின் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் பல வருடங்களாக உருவாகி வந்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. “அயலான்” திரைப்படம் முழுக்க முழுக்க சைன்ஸ் ஃபிக்சனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். ஏலியனை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
“அயலான்” திரைப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இவர் “இன்று நேற்று நாளை” என்ற டைம் மிஷினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை இயக்கியவர். “அயலான்”, “மாவீரன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஏ.ஆர்.முருகதாஸ் புராஜெக்ட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீண்டும் ஆர்.ரவிக்குமாரிடம் இணையவுள்ளதாக தகவல் வந்தது. ஆனால் ரவிக்குமாரின் புராஜெக்ட்டை அவர் தள்ளிவைத்துவிட்டாராம்.
அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை அணுகியிருக்கிறார். சிவகார்த்திகேயனும் ஓகே என கூற, அத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் வெங்கட் பிரபு புராஜெக்ட்டை தள்ளி போட்டுவிட்டாராம் சிவகார்த்திகேயன்.