- Advertisement -
Homeகிரிக்கெட்முதல் பந்தில் தோனி விக்கெட் எடுத்தும்.. ஹர்ஷல் படேல் கொடுத்த மரியாதை.. மனம் உருகிய ரசிகர்கள்..

முதல் பந்தில் தோனி விக்கெட் எடுத்தும்.. ஹர்ஷல் படேல் கொடுத்த மரியாதை.. மனம் உருகிய ரசிகர்கள்..

-Advertisement-

இதற்கு முந்தைய சில போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை அதிகம் கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மிகப் பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 167 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஏற்கனவே சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக இல்லாதது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்பட்டதால் அவர்களின் வெற்றி மிக எளிதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் முதல்முறையாக களமிறங்கிய வீரர்களான சிமர்ஜீத் சிங் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் மிக அழகாக பந்துவீசி ரன்களை அதிகமாக கொடுக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததன் காரணமாக 139 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணி எடுத்திருந்தது.

பேட்டிங்கில் 40 ரன்களுக்கு மேல் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதால் வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக இதே வெற்றி பயணத்தை தொடங்கினால் நிச்சயம் ப்ளே ஆப் சுற்றுக்கும் முன்னேறிவிடலாம்.

ஆனால் அதே வேளையில் சிஎஸ்கே பேட்டிங்கில் நடந்த சில குழப்பங்கள் நிச்சயம் சென்னை அணிக்கே வரும் போட்டிகளில் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக இதற்கு முன்பு நடந்த போட்டியில் கோல்டன் டக்கான ஷிவம் துபே, இதே போட்டியிலும் கோல்டன் டக் அவுட் ஆகியதால் டி 20 உலக கோப்பையில் அவரது பங்களிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

-Advertisement-

இதேபோல முதல் 7 போட்டிகளில் பேட்டிங் செய்து அவுட்டாகாமல் இருந்த தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரன் அவுட்டாகி இருந்தது போல இந்த போட்டியில் முதல் பந்திலேயே ஹர்ஷல் படேல் கோல்டன் டக்காகி ஏமாற்றம் அளித்திருந்தார். இப்படி தொடர்ந்து அதிரடி காட்டி வந்து இரண்டு வீரர்களும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சொதப்பிருந்தது கடும் விமர்சனத்தையும் சந்தித்தது.

இந்த நிலையில் தோனி விக்கெட் எடுத்ததும் ஹர்சல் படேல் செய்த சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. தோனி விக்கெட்டை முதல் பந்தில் எடுத்த மறுகணமே மிக அமைதியாக தான் இந்த விக்கெட்டை கொண்டாடி இருந்தார் ஹர்ஷல் படேல். பெரிய விக்கெட்டாக இருந்தபோதிலும் அதனை அந்த அளவுக்கு கொண்டாடாதது பற்றி பேசி இருந்த ஹர்ஷல் படேல், ‘எனக்கு தோனி மீது அந்த அளவுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அதனால் தான் நான் குறைவாக கொண்டாடி இருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்