- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்தை பாத்து கத்துக்கோங்க.. உலக கோப்பைக்காக கேப்டன் செஞ்ச விஷயம்.. மிட்செல் மார்ஷுக்கு க்ளாஸ் எடுத்த...

ரோஹித்தை பாத்து கத்துக்கோங்க.. உலக கோப்பைக்காக கேப்டன் செஞ்ச விஷயம்.. மிட்செல் மார்ஷுக்கு க்ளாஸ் எடுத்த ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இனி பல தொடர்களை தோற்றாலும் தொடர்ந்து கொண்டாடப்படும் அளவுக்கு டி20 உலக கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளனர் என்றே சொல்லலாம். பல நாட்களாக கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை சுற்றி கடுமையான விமர்சனங்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் போனது தான்.

தோனிக்கு பின்னர் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் முன்னணி வீரர்களாக மாறியதற்கு பின்னர் அவர்களால் ஒரு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. மற்ற அனைத்து அணிகளை விடவும் பலமாக இந்திய அணி விளங்கிய போதிலும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் அவர்களால் வெற்றிகளை குவிக்க முடியாமல் போனது.

இதற்கு உதாரணமாக நிறைய தொடர்களை சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பைத் தொடரிலும் இந்திய அணி தான் கோப்பையைக் கைப்பற்றும் என அனைவருமே கருதினர். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தி இருந்தது.

இந்திய மண்ணில், அதுவும் அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டி நடந்ததால் இந்தியாவுக்கு தான் கோப்பை என ரசிகர்கள் அனைவரும் கருதினர். ஆனால், ஆஸ்திரேலிய அணி வேறு லெவலில் ஆட்டம் ஆடி இந்தியாவிடம் இருந்து கோப்பையை வெட்றதுடன் ஆறாவது உலக கோப்பையை கைப்பற்றி வரலாறறு படைத்திருந்தனர்.

- Advertisement 2-

இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வேதனையில் திரிந்து வந்தனர். இந்த தோல்வியில் இருந்து மீள முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதனிடையே, கோப்பையை வென்ற பின் ரோஹித் ஷர்மா செய்த செயலையும், கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் செய்த செயலையும் ஒப்பிட்டு இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு எதிராக உலக கோப்பையை கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி வென்ற போது மிட்செல் மார்ஷ் அதன் மீது கால் வைத்திருந்து அமர்ந்த புகைப்படங்கள் பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இது தான் உலக கோப்பைக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா என பலரும் கொந்தளித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சமீபத்தில் மீண்டும் சொந்த மண்ணிற்கு வந்திருந்தனர். மும்பையில் வைத்து பிரம்மாண்ட பேரணியும் நடந்திருக்க, அந்த சமயத்தில் ரோஹித் ஷர்மா செய்த விஷயம் கவனம் பெற்று வருகிறது.

அப்போது கோப்பையை ஒரு மேஜை மீது வைத்த சமயத்தில் அதில் ஏதோ இருப்பதை ரோஹித் ஷர்மா கவனித்துள்ளார். அப்போது உடனடியாக ஒரு துணியை எடுத்து உலக கோப்பையை இருந்த தூசை துடைத்திருந்தார். இதனை கவனித்த இந்திய ரசிகர்கள் உலக கோப்பை மீது இப்படி தான் மரியாதை செலுத்த வேண்டுமென மிட்செல் மார்ஷுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்