- Advertisement 3-
Homeவிளையாட்டுகனவு போல் இருக்கு.. மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையே இல்லை.. என் ஹீரோ.. விராட் கோலி பேட்டி

கனவு போல் இருக்கு.. மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையே இல்லை.. என் ஹீரோ.. விராட் கோலி பேட்டி

- Advertisement 1-

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 105 ரன்களை விளாசியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதத்தை விளாசியதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர், உலகக்கோப்பை தொடரில் 700 ரன்களை விளாசிய முதல் வீரர் என்று பல்வேறு சாதனையை படைத்துள்ளார். இதனால் பலரும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆட்டம் பற்றி விராட் கோலி பேசும் போது, இதையெல்லாம் பார்க்கும் போது கனவு போல் உள்ளது. இந்த தொடரில் ஆடியது போல் எனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் விளையாடி இருக்கிறேன். எனது ரோலை நான் சிறப்பாக செய்ததன் மூலம், என்னை சுஇற்றி மற்ற வீரர்களாலும் சிறப்பாக விளையாட முடிந்தது. நிச்சயம் சிறந்த இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரை இந்திய அணி வெற்றிபெற வேண்டும். அதற்காக நான் என்னை செய்ய வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கிறேன். ரன்கள் ஓட வேண்டும், 2 ரன்கள் ஓட வேண்டுமா, பவுண்டரி விளாச வேண்டுமா.. அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன். எனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்ய வேண்டும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்து வருகிறேன்.

- Advertisement 2-

50வது சதம் விளாசியது கனவு போல் உள்ளது. அனுஷ்கா, சச்சினி இருவரும் இங்குதான் இருக்கிறார்கள். இதனை விளக்கமாக சொல்வதற்கு கடினமாக உள்ளது. என்னால் ஓவியம் வரைய முடிந்தால், இதனை வரைவேன். அவர்கள் முன்னிலையில் நான் 50வது சதத்தை விளாசியது மகிழ்ச்சியளிக்கிறேன். முக்கியமான ஆட்டத்தில் 330 முதல் 340 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் 400 ரன்கள் அருகில் சென்றுள்ளோம். நிச்சயமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் பாராட்டுகளை சொல்ல வேண்டும். ஏனென்றால் சுப்மன் கில் திடீரென வெளியேறிய பின் ஸ்ரேயாஸ் ஐயர் வந்த உடனே அப்படியொரு ஆட்டத்தை ஆடினார். அதேபோல் சுப்மன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். அனைத்து வீரர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்துள்ளனர் என்று கூறினார்.

சற்று முன்