- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுலயுமா ரோஹித்தை ஒதுக்குவீங்க.. மீண்டும் சோதித்த மும்பை இந்தியன்ஸ்.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்..

இதுலயுமா ரோஹித்தை ஒதுக்குவீங்க.. மீண்டும் சோதித்த மும்பை இந்தியன்ஸ்.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்..

- Advertisement 1-

ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மாற்றி விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்து பல நாட்கள் ஆன போதிலும் இதனை ரோஹித்தின் ரசிகர்கள் இன்னும் மறந்ததாக தெரியவில்லை. அப்படி இருக்கையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பதிவு ஒன்று அவர்களை மேலும் கடுப்பாக்கி உள்ளது.

கடைசியாக உலக கோப்பை தொடரில் ஆடி இருந்த ரோஹித் சர்மா, அதன் பின்னர் நேரடியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் களமிறங்கி இருந்தார். இதனை சமனில் முடித்திருந்த ரோகித் சர்மா, அதன்பின்னர் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரிலும் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட உள்ள சூழலில், இந்த தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் காண வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

- Advertisement 2-

இதில் இந்திய அணியின் தேர்வு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என குறிப்பிட்டிருந்த மும்பை அணி, கே எல் ராகுல், பும்ரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் டெஸ்ட் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்துடன் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலையும் குறிப்பிட்டு இருந்தது. தங்கள் அணியின் கேப்டனாக இருந்து ஐந்து கோப்பையை வென்று கொடுத்ததுடன் மட்டுமில்லாமல் தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா புகைப்படத்தை அவர்கள் இதில் இடம்பெறச் செய்யாமல் போனது தான் தற்போது ரசிகர்களை இன்னும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி ரோஹித் சர்மா மீது மும்பை அணிக்கு என்ன கோபம் என்பதை பற்றி பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தங்களின் எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தது.

இதில் ஒரு பக்கம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவும், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் ஷாஹீன் அப்ரிடியின் புகைப்படமும் இருந்தது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கும்போதே ஹர்திக் பாண்டியா புகைப்படத்தை இடம் பெறச் செய்தது அதிக கண்டனங்களை உருவாக்கி இருந்த நிலையில், தற்போது ரோஹித் சர்மா ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியே இப்படி ஒரு பதிவை பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்