- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடுத்தடுத்து டக் அவுட்.. இனிமே கஷ்டம் தான்.. ரோஹித் எடுக்க போகும் முடிவால் ரிங்கு சிங்கிற்கு...

அடுத்தடுத்து டக் அவுட்.. இனிமே கஷ்டம் தான்.. ரோஹித் எடுக்க போகும் முடிவால் ரிங்கு சிங்கிற்கு வந்த சிக்கல்?

- Advertisement 1-

ஒருகாலத்தில் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தான் இளம் வீரர்கள் அதிகம் பேர் இந்திய அணியில் இடம்பிடித்து வந்தனர். ஆனால் தற்போது அதை எல்லாம் தாண்டி, அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் அதிகம் ஆடும் டெஸ்ட் போட்டியிலும் இளம் வீரர்களே நிரம்பி வழிகின்றனர். டி 20 போட்டிகளின் மூலம் கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள் அப்படியே டெஸ்ட் அணியிலும் நுழைந்து விடுகின்றனர்.

இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இதில் பாதகங்களான விஷயங்களும் நிறைய உள்ளது. ஐந்தில் ஒரு இளம் வீரர் சிறப்பாக ஆடும் பட்சத்தில், மற்ற வீரர்கள் அனைவரும் ரன் சேர்க்கவே தடுமாறுகின்றனர். அதிலும் நெருக்கடியான சூழல் வரும் போது அனுபவமின்மை காரணமாக அதனை சமாளிக்க முடியாமலும் அவர்கள் ஆட்டம் காண்கின்றனர்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஆடி வருவதே போதும். முதல் டெஸ்டில் சொதப்பி தோல்வி அடைந்திருந்த அவர்கள், இரண்டாவது டெஸ்டிலும் ஏறக்குறைய அப்படி தான் ஆடி வருகிறார்கள். இந்த போட்டியின் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ள சூழலில், ஜெய்ஸ்வால் தவிர மற்ற எந்த வீரர்களும் ரன்கள் சேர்க்கவில்லை. அவர் 150 ரன்கள் கடந்து அடித்துள்ள நிலையில், இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

இதற்கிடையில் இளம் வீரர்கள் காரணமாக புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வழி இல்லாமல் போய் விட்டது. அப்படி இருக்கையில், ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் தொடர்களில் ஆடி வரும் இளம் வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் சேர வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருவது பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement 2-

அந்த வகையில், டி 20 போட்டிகளில் பினிஷராக இருந்து வரும் ரிங்கு சிங் விரைவில் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என்றும் சில கருத்துக்கள் பரவலாக இருந்து வந்தது. ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த ரிங்கு சிங், இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் சூழலில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைத் தொடரிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் பக்கம் உள்ளது.

அப்படி அவர் தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி மோதி வரும் அதிகார்பூர்வமில்லாத டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து ஆடி வருகிறார். இவர் தற்போது நடந்து வரும் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான நிலையில், இதற்கு முந்தைய டெஸ்டிலும் டக் அவுட்டாகி இருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத சூழலில், ரிங்கு சிங் இடம்பிடிப்பார் என கருதபட்டது. ஆனால், அவரது ஆட்டத்தால் ரோஹித் அந்த முடிவை எடுக்கமாட்டார் என்றே தெரிகிறது.

சற்று முன்