- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் எங்க.. பரபரப்பாக நண்பனை தேடிய கோலி.. காரணம் தெரிஞ்சு எமோஷனல் ஆன ரசிகர்கள்..

ரோஹித் எங்க.. பரபரப்பாக நண்பனை தேடிய கோலி.. காரணம் தெரிஞ்சு எமோஷனல் ஆன ரசிகர்கள்..

- Advertisement 1-

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சண்டை போட்டு பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கோலி கேப்டனாக இருந்து அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா கையில் கேப்டன்சி மாற்றப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் கோலியை வேண்டுமென்றே பிசிசிஐ நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்து கேப்டன் பதவியில் இருந்து மாற்ற சொல்லி தான் ரோஹித்தை புதிய கேப்டனாக அவர்கள் அறிவித்ததாக கடும் சர்ச்சைகள் இந்த சம்பவத்தை சுற்றி உருவானது. இதனிடையே, ரோஹித் மற்றும் கோலி என இருவருமே சண்டையில் இருந்து வருவதாகவும் அவர்களின் பெயரில் இந்திய அணிக்குள் நிறைய பிரச்சனைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பூதாகரமாக வெடித்திருந்தது.

ஆனால் தங்கள் நட்பிற்கிடையே எந்த பிளவும் இல்லை என்பதை அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக களமிறங்கி நிரூபித்திருந்தனர் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர். அது மட்டுமில்லாமல், விராட் கோலி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதே போல, ரோஹித் ஷர்மா 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

ஆனால், இந்திய கிரிக்கெட்டில் தலைச்சிறந்த வீரர்களாக இருக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இணைந்து ஒருமுறை கூட எந்த உலக கோப்பையை கைப்பற்றவில்லை. இதற்காக இந்த இரண்டு பேருமே நீண்ட ஆண்டுகள் பல வேதனைகளுடன் காத்திருந்து வந்த நிலையில் தான் அதற்கான பல மடங்கு பலன், இந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு பேருக்குமே கைகூடி இருந்தது.

- Advertisement 2-

பல உலக கோப்பை தோல்விகளால் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவருமே துவண்டு போன சூழலில், இந்த உலக கோப்பை நல்ல தீர்வை கொடுத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பேரும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிக்க இதை விட அதற்கு சிறந்த தருணம் இருக்காது என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இந்த இரண்டு பேரும் இணைந்து கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நிறைய தருணங்கள் இந்திய கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான தருணமாக மாறி இருந்தது.

இதனிடையே, வெற்றிகரமாக டி20 உலக கோப்பையை வென்று சமீபத்தில் இந்தியா திரும்பி இருந்த வீரர்களுக்கு மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டிருந்தது. திறந்தவெளி பேருந்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அவர்கள் வலம் வந்த போது ஊரே திருவிழா போல கூடி இருந்தது.

அப்படி ஒரு சமயத்தில் கோலி செய்த விஷயம் ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை நெகிழ வைத்துள்ளது. பேருந்தில் கோப்பையுடன் விராட் கோலி நின்று கொண்டிருக்க, ரோஹித்தை தேடிக் கொண்டிருந்தார். மற்ற பலர் அருகில் இருந்த போதிலும் கோலி பொருட்படுத்தாமல் ரோஹித்தை அழைத்து வந்து கோப்பையுடன் ஒன்றாக போஸ் கொடுத்திருந்தார்.

அவர்கள் இரண்டு பேரின் நட்பிற்கு இலக்கணமாக இதை விட சிறந்த தருணத்தை நிச்சயம் விவரிக்க முடியாது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

சற்று முன்