- Advertisement -
Homeகிரிக்கெட்இதுதான் தோனியோட கடைசி ஐபிஎல்.. 17 வது சீசனின் ஃபைனல் குறித்து வெளியான தகவலால் ஏங்கிய...

இதுதான் தோனியோட கடைசி ஐபிஎல்.. 17 வது சீசனின் ஃபைனல் குறித்து வெளியான தகவலால் ஏங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்..

-Advertisement-

17 வது ஐபிஎல் சீசன் சமீபத்தில் ஆரம்பமான நிலையில், இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளில் முறையே சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் ஒரு அணிக்கு சாதகமான முடிவாக சென்றாலும் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி இருந்த போட்டி, கடைசி பந்து வரை விறுவிறுப்பாகவே சென்று இருந்தது. மூன்று ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது ஹைதராபாத் வீரர் கிளாஸன் ஏழு சிக்ஸர் பறக்க விட்டு போட்டியை தங்கள் பக்கம் மாற்றி இருந்தார்.

ஆனாலும் கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் எடுத்ததால் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இன்று நடைபெறும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

மூன்று போட்டிகளில் ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பான ஒரு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இனி வரும் போட்டிகளும் தரமாக இருக்கும் என்று ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் தற்போது பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கும் மைதான விவரம் குறித்த சில தகவல்கள் தோனி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

-Advertisement-

தோனிக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் அவர் விரைவில் ஓய்வினை அறிவிப்பார் என்று தான் ரசிகரின் கருத்தாக உள்ளது. அதேபோல முன்பு ஒரு முறை தோனி பேசியிருந்த போது தனது கடைசி போட்டி நிச்சயம் சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில் தான் தற்போது ஐபிஎல் ஃபைனல் நடக்கும் மைதானம் குறித்த தகவல் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

அதன்படி குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றது. இதே போல குவாலிஃபயர் 2 மற்றும் ஃபைனல்ஸ் ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தான் கடைசி ஐபிஎல் போட்டியில் ஆடுவேன் என தோனி தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஃபைனல் அங்கே நடைபெற இருப்பதால் ஒருவேளை சிஎஸ்கே ஃபைனலுக்கு வந்தால் இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்