- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கேவுக்காக மட்டும் நான் அதிரடியா ஆட இது மட்டும் தான் காரணம்.. எமோஷனல் ஆன ஷிவம்...

சிஎஸ்கேவுக்காக மட்டும் நான் அதிரடியா ஆட இது மட்டும் தான் காரணம்.. எமோஷனல் ஆன ஷிவம் துபே..

-Advertisement-

சிஎஸ்கே அணியை பொருத்த வரையில் மற்ற அணிகளில் அனுபவம் இருந்தும் ஜொலிக்க முடியாத வீரர்கள் இங்கே இணைந்து விட்டால் அவர்கள் ஆடும் விதமே வேறு ரகமாக இருக்கும். ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே என பல இளம் வீரர்களை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல ராபின் உத்தப்பா, ரஹானே உள்ளிட்ட சீனியர் வீரர்களும் கூட சிஎஸ்கே அணியில் இணைந்த பின்னர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஒரு நிமிடம் மிரண்டு போகத்தான் வைத்திருந்தது.

இப்படி ஒரு அணி, நிர்வாகம் போல வீரர்களை கட்டுப்படுத்தாமல் ஒரு குடும்பமாக இருந்து அணியில் வரும் வீரர்கள் அனைவரையும் மிக பக்கபலமாக உடனிருந்து தேற்றி வருவதுடன் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவி செய்து வருகிறார்கள். ஒருவேளை சிறப்பாக ஆடாமல் போனால் கூட வாய்ப்பை இழக்க வைத்து அவர்களை ஒதுக்கி விட நினைக்காமல் தொடர்ந்து வாய்ப்பளித்து நல்ல ஒரு வீரராக மாறுவதற்கும் வழி செய்வார்கள்.

அந்த வகையில் கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக எதிர்பாராத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தான் ஷிவம் துபே. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஆடி வந்தாலும் தொடர்ந்து அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் ஆடியும் ஷிவம் துபேவின் கிரிக்கெட் ஆட்டம் விமர்சனத்தை தான் சந்தித்து வந்தது.

அப்படி இருக்கையில் சிஎஸ்கே அணிக்காக மூன்று சீசன்களாக ஆடி வரும் துபே, பல விமர்சனத்தை சந்தித்த பின்பு நெருப்பு போன்ற ஆட்டத்தை சிஎஸ்கே ஸ்பெஷலாக ஆடி வருகிறார். ஸ்பின்னர் பந்து வீசினாலே சிக்ஸர் அடிப்பதை தான் வழக்கமாக வைத்துள்ள ஷிவம் துபே, குஜராத் அணிக்கு எதிரான சமீபத்தில் நடந்த போட்டியில் முதல் பந்திலயே சிக்சர் அடித்து மிரட்டி இருந்தார்.

-Advertisement-

21 பந்துகளில் 51 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கும் முக்கிய பங்கு வகித்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார். கடந்த போட்டியிலும் இவர் கடைசி கட்டத்தில் ரன் சேர்த்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசுகையில், “சிஎஸ்கே அணி மற்ற அனைத்து அணிகளையும் விட மிக வித்தியாசமான ஒன்றாகும். இவர்கள் எனக்கு சுதந்திரம் அதிகமாக கொடுப்பதால் நான் அவர்களுக்காக போட்டியை ஆடி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

நானும் அப்படியே என்னை செயல்படுத்த நினைப்பதால் அது எனக்கு உதவியும் செய்கிறது. அதற்காக நான் தயாராக உள்ளேன். சிஎஸ்கேவை பொருத்தவரையில் நான் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடடன் ஆட வேண்டும் என விரும்புகிறார்கள். நானும் அதையே தான் செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

-Advertisement-

சற்று முன்