- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கே கூட இப்ப தோத்தது நல்லது தான்.. அடேங்கப்பா.. வித்தியாசமான காரணம் சொல்லி விளக்கம் கொடுத்த...

சிஎஸ்கே கூட இப்ப தோத்தது நல்லது தான்.. அடேங்கப்பா.. வித்தியாசமான காரணம் சொல்லி விளக்கம் கொடுத்த கில்..

-Advertisement-

17 வது ஐபிஎல் சீசன் தற்போது அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முறை பல கேப்டன்கள் மாற்றம் நடந்திருந்தது கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது. அதிலும் அனுபவம் வாய்ந்த கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சிலர் கேப்டனாக இல்லாமல் பெரும்பாலும் இளம் வீரர்களே இந்த முறை நிறைய அணிகளை தலைமை தாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக இத்தனை காலம் கேப்டனாக வழி நடத்தி வந்த தோனி, திடீரென தான் கேப்டன் பகுதியில் இருந்து விலகுவதாகவும் ருத்துராஜை புதிய கேப்டன் என்றும் அறிவித்திருந்தார். முதலில் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பினை சம்பாதித்து இருந்தாலும் பெங்களூர் அணிக்கு எதிராக சிறப்பாக அணியை தலைமை தாங்கி ருத்துராஜ் வெற்றி பெற செய்ததால் தோனியை போலவே அவர் கேப்டன்சி செய்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்ட தொடங்கி விட்டனர்.

இதே போல, குஜராத்தின் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பையில் இணைந்ததால் அந்த அணியை தற்போது வழிநடத்தும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருந்தது. இவர் மும்பைக்கு எதிராக சிறப்பாக கேப்டன்சி செய்து போட்டியை வெற்றி பெற வைத்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது மோதிய போட்டியில் முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்திருந்தது.

20 ஓவர்களில் அவர்கள் 206 ரன்கள் எடுக்க, தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் வெற்றி பெறும் வாய்ப்பையும் இழந்தனர். கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் 143 ரன்களே எடுக்க, சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் 2 வது வெற்றியை பெற்றிருந்தது.

-Advertisement-

முதல் போட்டியில் படுஜோராக கேப்டன்ஷிப் செய்த கில், சென்னைக்கு எதிரான தோல்விக்கு பின் பேசுகையில், “நாங்கள் பேட்டிங் செய்தபோது எங்களை அவர்கள் ஆட்டமிழக்க செய்ததும் அவரது திட்டங்களை நிறைவேற்றிய விதமும் நன்றாக இருந்தது. நாங்கள் பவர் பிளேயில் சிறப்பான ஸ்கோர்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போனதால் அது எங்களுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. டி20 போட்டிகளில் எப்போதுமே 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருப்பது பிரச்சினையாக தான் இருக்கும். இந்த மைதானத்தில் நாங்கள் 190 முதல் 200 ரன்கள் வரை சேசிங் செய்யலாம் என நினைத்தோம்.

மேலும் இந்த போட்டி பந்து வீச்சாளருக்கு நிறைய கற்றுக் கொள்ளும் வழியாகவும் இருக்கும். அதனால், இந்த போட்டி தொடரின் நடுவிலோ அல்லது கடைசியிலோ வராமல் இப்போது வந்தது மிகவும் சந்தோஷமாக தான் உள்ளது. பேட்டிங்கில் நாங்கள் நிறைய தவறுகளை செய்து விட்டோம் என உணர்கிறேன்.

மேலும் ஒரு கேப்டனாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதுடன் புது அனுபவங்களும் நிறைய கிடைத்துள்ளது. குஜராத் போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது உற்சாகமாக இருப்பதுடன் கடந்த இரண்டு முறையும் ஃபைனல் சென்ற அணி என்பதால், மீண்டும் அப்படி நடக்க வேண்டுமென்ற ஆவலும் அதிகம் உள்ளது” என கில் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்